Thursday, March 26, 2009

திருமதி எஸ்.பி.மயில்வாகனன் லண்டனில் காலமானார்.

திருமதி செந்திமணி மயில்வாகனன் அவர்கள் இம்மாதம் 23ஆம் தேதி லண்டனில் காலமானார்.

அன்னார், `தினகரன்’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர், காலஞ்சென்ற இராமநாதன் தம்பதியரின் அன்பு மகளும்;

காலஞ்சென்ற, இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனனின் அன்பு மனைவியும்;

ரமணன், யசோதா, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மிலி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்; குயலந அனுஷா, நீலன், சோபனா, சுகன்யா, ஆரணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்;

கொழும்பு சைவமங்கையர் கழக முன்னாள் துணை அதிபர், காலஞ்சென்ற செந்திசெல்வம் இரத்தினாதிக்கம், காலஞ்சென்ற செந்திராஜா ஆகியோரின் அன்புச சகோதரியும்;

கண்மணி பாலசுப்பிரமணியத்தின் அன்பு மைத்துனியும்; காலஞ்சென்ற
சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு , Manor Park, City of London Crematorium அஞ்சலி கூடத்தில் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு
பூதவுடல் தகனம் செயப்படும்.

தகவல்: பிள்ளைகள்
தொலைபேசி: 07736299792
49 Naseby Road, Clayhall, Ilford, Essex IG5 0NN

Wednesday, March 25, 2009

எஸ்.பி.மயில் வாகனன்,சரா இமானுவல் ,கோகிலவர்த்தனி குரல் பதிவு


இலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்
அவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]


மயில்வாகனனைப் பேட்டி காண்பவர்கள் ....
இலங்கை வானொலி 'இசையும் கதையும் ' புகழ் சரா இமானுவல்
மற்றும் பிரபல அறிவிப்பாளர் கோகிலவர்த்தனி.

இந்த அபூர்வ புதையலைத் தேடிக் கண்டு பிடித்து தந்து உதவிய
'நேயர் திலகம் ' சேலம் ,ஆத்தூர் விஜயராம் ஏ.கண்ணன் அவர்களுக்கு
என் கண் நனைந்த நன்றிகள்.

LINK

இலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR