Thursday, July 27, 2006

ஜேசுதாஸின் பெருந்தன்மை.....இளையராஜா

தமிழ்த் திரைப் பட வரலாற்றில் முதன் முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் 'பிரியா'.

இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா அவர்கள் ஸ்டீரியோ முறையில் பதிவு செய்த போது அதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பங்களிப்பும் உதவியும் முக்கியமாக இருந்தது என்கின்ற தகவல் பலருக்குத் தெரியாது.

ஆம். கே.ஜே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சொந்தத் தேவைக்காக ஸ்டீரியோ தொழில் நுட்ப சாதனங்களை வாங்கிக் கொண்டு வந்து தமது வீட்டில் வைத்திருந்தார்.

இளையராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தக் கருவிகளை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார் ஜேசுதாஸ்.'

பிரியா' படத்தின் பாடல் ஒலிப்பதிவு சென்னை பரணி ஸ்டூடியோவில் நடந்த போது ஒவ்வொரு பாடலும் ஒலிப்பதிவு செயப்படும் வரை இளையராஜாவோடு அருகில் இருந்து ஒத்தாசைகளையும் தாமே முன் வந்து வழங்கினார் ஜேசுதாஸ்.

பின்னாளில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசும் போது... ஜேசுதாஸின் பெருந்தன்மை ...என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார் இளையராஜா.

இளையராஜா சொல்கிறார்.

'பிரியா படத்திற்காக தமது கருவிகளைக் கொடுத்தமைக்காக எந்தக் கட்டணத்தையும் ஜேசுதாஸ் எங்களிடம் வாங்கவில்லை.

அந்த ஒலிப் பதிவின் போது அவர் செய்த உதவி அவரது சகோதரத்துவத்துக்கும்,ஆழ்ந்த நட்புணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும்'.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

1 comment:

கார்த்திக் பிரபு said...

nalla padhuvu..pugaipadangalaiyum inaiyungall..appodhu thaan innum sirappaga irukku padivu..