Friday, November 24, 2006

டி.எம்.எஸ்ஸூக்காக எம்.ஜி.ஆரிடம் வாதாடிய தேவர்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் ,'பாடகர் திலகம்' டி.எம்.எஸ்ஸூக்கும் இடையே எதிர்பாராத சிறிய 'விரிசல்'ஏற்பட்டிருந்த சமயம் அது.

அப்போது சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்த 'நல்ல நேரம்' படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்தார்.

'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ்ஸூக்குப் பதிலாக எல்லாப் பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே பாட வையுங்கள்.

ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த யோசனை ' என்று தேவரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார் எம்.ஜி.ஆர்.

தேவருக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.

டி.எம்.எஸ். ஏன் என் படத்தில் பாடக்கூடாது ?
அவர் செய்த பாவம்தான் என்ன?
அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள். இரண்டு தட்டு தட்டிக் கொண்டுவந்து உங்கள் முன்னாலே கொண்டுவந்து அவரை நிறுத்துகிறேன்.

ஆனால் டி.எம்.எஸ்ஸை நல்ல நேரத்தில் பாட வைக்கக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால்...' நல்ல நேரம்' படத்தை எடுப்பதையே நான் நிறுத்திக் கொள்ளுகிறேன்..." என்றார் படபடப்பாக தேவர்.

அதைக் கேட்டதும் அதிர்ந்து போன எம்.ஜி.ஆர்....பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அண்ணே ...உங்க விருப்பபடியே டி.எம்.எஸ். பாடட்டும்" என்றார் சமாதானமாக.

இந்த சம்பவம் பற்றி தேவர் , டி.எம்.எஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பழைய கால சம்பவங்களை நினைவு கூர்ந்தாராம்.

ஜூபிடர் பிக்சர்ஸ் 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நீ பாடிக்கொண்டிருந்த சமயம்... அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

இருவரின் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்திலேயே துவங்கியது.

அதேபோல , 'சுதர்சன்' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீயும் நானும் ஒன்றாக நடித்தோமே .. ஞாபகம் இருக்கிறதா?

இசையிலும் , வாழ்விலும் நீ முருகனை நம்பி வந்தாய்.

கலையுலகிலும் , வாழ்க்கையிலும் நானும் அதே முருகனையே நம்பி வந்தேன்.

இருவரையும் அவனே உயர வைத்தான்.

ஒரு முருக பக்தனான டி.எம்.எஸ்ஸூக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக் கொள்வது , இன்னொரு முருக பக்தனான எனது தார்மீக கடமை அல்லவா?

அதனால் தான் உனக்காக எம்.ஜி.ஆரிடம் பரிந்து பேசினேன்.."என்றார் சாண்டோ M.M.A.சின்னப்பா தேவர்.

தேவர் உயிரோடு இருக்கும் வரை தாம் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார்.

இளைய தலைமுறை நடிகர்கள் கமல். ரஜினி. சிவக்குமார் ஆகியோரை வைத்து ' தாயில்லாமல் நானில்லை ' 'தாய் மீது சத்தியம் ' 'ஆட்டுக்கார அலமேலு' வெள்ளிக்கிழமை விரதம்' என்றெல்லாம் படங்களை எடுத்த போதெல்லாம் கூட அவர்களுக்காகவும் டி.எம்.எஸ்ஸை பாடவைத்தார்.

முருகனையே பரிபூரண கதியாக எண்ணி வாழ்ந்த தேவர்... முருகப் பெருமானுக்கு உரிய நாளாகிய ஷஷ்டியன்று காலமானார்.

நன்றி மறக்காத டி.எம்.எஸ் , தேவரின் பூதவுடல் அருகே அமர்ந்து ஒரு மணி நேரமாக முருக பக்திப் பாடல்களை கண்ணீர் மல்கப் பாடி தேவருக்கு மானசீகமாக தமது நன்றி மலர்களைக் காணிக்கையாக்கினார்.
- யாழ் சுதாகர்
எம்.ஜி.ஆர் புகைப்படங்கள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவசீகரமான புகைப் படங்களின் தொகுப்பைப் பார்த்து ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.
----- ----- ----
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
YAZHSUTHAKAR,YAZH SUTHAKAR,YAZHSUTHAHAR, YAZH SUTHAHAR,
YAZHSUDHAKAR,YAZH SUDHAKAR,YAZH SUDHAGAR,YARL SUTHAHAR,YARL SUTHAKAR,YARL SUDHAKAR
TMS SONGS,T.M.SOUNTHARARAJAN SONGS,T.M.SOUNDARARAJAN SONGS,MGR SONGS,SIVAJI SONGS,KANNATHASAN SONGS,KANNADASAN SONGS,SPB TAMIL SONGS,K.J.JESUTHAS TAMIL SONGS,S.JANAKI TAMIL SONGS,S.JANAKI SONGS,TAMIL OLD SONGS,VANI JEYARAM SONGS,VAANI JEYARAM SONGS,KAMAL SONGS

3 comments:

Anonymous said...

God bless Yazh,
Glad to see you back on the blog. Read the ancedote, liked it very much. Though the matter is known to me, that TMS sang an hour before Devar's body is news to me. Keep going. Keen to read more such episodes.
K P Subramanian

Anonymous said...

It looks like, MGR consistantly tryied to drag down TMS. Certainly TMS's golden voice helped him as a shieldd from all such evill acts.

Even though MGS told this to Thevar, latter during the period of Ulagam sutrum valiban, he gave almost all of the songs to TMS as MGR don't want to see failure as the situation was so challenging.

Please keep up the good work Sudhakar.

Thanks
Ganesh

G.Ragavan said...

யாழ் சுதாகர், உங்கள் பெயரை நான் வானொலியில் கேட்டிருக்கிறேன். கே.எல்.ரேடியோவிலா? நீங்கள் வலைப்பூ எழுதுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

டி.எம்.சும் சரி தேவரும் சரி...இருவருமே முருகனடியவர்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

உங்களுடைய மற்ற பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.