Saturday, July 29, 2006





கே.எஸ்.ராஜாவின் குரலில் ஒலித்த வர்த்தக விளம்பரங்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். [ NEW]

பாகவதரின் தீவிரமான ரசிகர்...டி.எம்.எஸ்



'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்கள், பாகவதரின் தீவிரமான ரசிகர்.

பாகவதரின் பாடல்களைக் கேட்டதால் தான் சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆர்வமும் தாகமும் அவருக்கு அதிகமானதாம்.

அதனால் தானோ என்னவோ டி.எம்.எஸ்ஸின் துவக்க கால பாடல்களில், டி.எம்.எஸ்ஸின் குரலில் பாகவதரின் சாயலும் ,முத்திரைகளும் அதிகமாக இருக்கும்.

பாகவதரைப் போல பாடவேண்டும் என்பதற்காக டி.எம்.எஸ். அவரது பாடல்களை திரும்பத் திரும்ப உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

'கடம்' மாதிரி வாய் சின்னதாக இருக்கும் மண் பானையை வாங்கி ,
அதற்குள் தமது வாயை வைத்துக் கொண்டு பலவித குரல்களை எழுப்பி... அதில் பாகவதர் வாய்ஸ் எந்த இடத்தில் வருகிறது என்பதை கண்டுபிடித்து, அந்தக்குரலை நாளும் பொழுதுமாக மண்பானைப் பயிற்சி மூலமாக உருவாக்கிக் கொண்டாராம்.
பாகவதர் ஸ்டைலுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

டி.எம்.எஸ். பின்னணிப் பாடகரக அறிமுகமாகி... இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே பாகவதர் பாதிப்புடன் பாடினார்.

அதற்குப் பிறகு தம்க்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி, தமது கடின உழைப்பாலும் , கதாபாத்திரங்களுக்கும் , நட்சத்திரங்களுக்கும் ஏற்ப தமது குரலிலே வண்ணங்களையும், வித்தியாசங்களையும் காட்டக் கூடிய அளவுக்கு 'தனித்துவம்' பெற்ற பாடகராக முத்திரை பதித்தார்.



பாகவதரின் சாயலில் டி.எம்.எஸ். பாடிய சில பாடல்கள்:

1.கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன் (பட்டினத்தார்)

2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்)

3. நாடகமெல்லாம் கண்டேன் ( மதுரை வீரன்)

4. வசந்த முல்லை போலே வந்து (சாரங்கதாரா)

5. ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)

6. ஆடவேண்டும் மயிலே ( ' அருணகிரி நாதர்' )

7. வில்லேந்தும் வீரரெல்லாம் ( குலேபகாவலி)

8. ஏரிக்கரையின் மேலே (முதலாளி)

9. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

10. முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்)

11. வா கலாப மயிலே ( காத்தவராயன்)

12. பெண்களை நம்பாதே (தூக்குதூக்கி)

13. நான் பெற்ற செல்வம் (நான் பெற்ற செல்வம்)

14. தில்லையம்பல நடராஜா (சௌபாக்யவதி)

15. வாழ்ந்தாலும் ஏசும் ( நான் பெற்ற செல்வம்)

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

Thursday, July 27, 2006

டி.எம்.எஸ்ஸின் இளமைக் காலப் படங்கள்

டி.எம்.எஸ்ஸின் இளமைக் காலப் படங்கள்
புகைப் படங்கள் தொகுப்பு - யாழ் சுதாகர்]

டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க....

'கல்லும் கனியாகும்' ,'அருணகிரி நாதர்', பட்டினத்தார்'...ஆகிய படங்களில் டி.எம்.எஸ் நடித்த காட்சிகளைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.
[புகைப் படங்கள் தொகுப்பு - யாழ் சுதாகர்]

ஜேசுதாஸின் பெருந்தன்மை.....இளையராஜா

தமிழ்த் திரைப் பட வரலாற்றில் முதன் முதலாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படம் 'பிரியா'.

இந்தப் படத்தின் பாடல்களை இளையராஜா அவர்கள் ஸ்டீரியோ முறையில் பதிவு செய்த போது அதற்கு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பங்களிப்பும் உதவியும் முக்கியமாக இருந்தது என்கின்ற தகவல் பலருக்குத் தெரியாது.

ஆம். கே.ஜே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சொந்தத் தேவைக்காக ஸ்டீரியோ தொழில் நுட்ப சாதனங்களை வாங்கிக் கொண்டு வந்து தமது வீட்டில் வைத்திருந்தார்.

இளையராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தக் கருவிகளை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தார் ஜேசுதாஸ்.'

பிரியா' படத்தின் பாடல் ஒலிப்பதிவு சென்னை பரணி ஸ்டூடியோவில் நடந்த போது ஒவ்வொரு பாடலும் ஒலிப்பதிவு செயப்படும் வரை இளையராஜாவோடு அருகில் இருந்து ஒத்தாசைகளையும் தாமே முன் வந்து வழங்கினார் ஜேசுதாஸ்.

பின்னாளில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசும் போது... ஜேசுதாஸின் பெருந்தன்மை ...என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார் இளையராஜா.

இளையராஜா சொல்கிறார்.

'பிரியா படத்திற்காக தமது கருவிகளைக் கொடுத்தமைக்காக எந்தக் கட்டணத்தையும் ஜேசுதாஸ் எங்களிடம் வாங்கவில்லை.

அந்த ஒலிப் பதிவின் போது அவர் செய்த உதவி அவரது சகோதரத்துவத்துக்கும்,ஆழ்ந்த நட்புணர்வுக்கும், பெருந்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகும்'.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

தமது படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில் அதிக அக்கறையும் சிரத்தையும் எடுத்துக் கொள்ளுவார் எம்.ஜி.ஆர்.

தாம் எதிர்பார்க்கும் விதத்தில் மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார் எம்.ஜி.ஆர்.

இதைப் பற்றி ' மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்.

தாம் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமன்றி...பாடல் வரிகளும் கூட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளுவார்.

எந்தப் பெரிய கவிஞராக இருந்தாலும்...எம்.ஜி.ஆர், போதும் என்று சொல்லும் வரை ...அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடல் வரிகளை அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து பாடல் எழுதுவது வரை...இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும் , சகிப்புத் தன்மையும் அவசியமாக இருந்தது.

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் கசக்கிப் பிழிந்து விடுவார்.

ஆனாலும் அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான் மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட எம்.ஜி.ஆரின் பழைய பாடல்களை இன்றைய 20 வயது இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன என்றால் அது மிகை அல்ல.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம் 'நினைத்ததை முடிப்பவன்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் அவர்களை வேவு பார்க்க வந்து மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில் பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

மெல்லிசை மன்னர் எம்.ஜி.ஆருக்கே உரித்தான உற்சாகம் பொங்கி வரும் விதத்தில் அருமையான ஒரு மெட்டமைத்து எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை அந்த மெட்டுக்குப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

காட்சிச் சூழலை நன்கு கேட்டுத் தெரிந்து கொண்ட அந்தக் கவிஞர்...பாடல் எழுதி முடித்ததும் எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார்.

பாடல் வரிகள் நன்றாக இருந்தும் எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால் மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும் ,சரணங்களையும் எழுதச் சொன்னார்.

அந்தக் கவிஞரும் சளைக்காமல் எழுதிக் கொடுத்தார்.

ஆனாலும் எம்.ஜி.ஆர் முகத்தில் திருப்தி இல்லை.

வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து இதே மெட்டுக்கு எழுத வைத்தார்கள்.

அந்தப் பாடலிலும் மக்கள் திலகத்துக்குத் திருப்தி இல்லை.

இதே போல அந்த நாளில் பிரபலமாக இருந்த 5, 6 கவிஞர்கள் அந்த மெட்டுக்குப் பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர்.எந்த வரிகளுமே எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.

கடைசியில் ஒரு மூத்த கவிஞரைக் கூப்பிட்டு எழுதச் சொன்னார்கள்.

பாடல் வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆர் முகத்தில் பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது.

'இது தான் இதே தான் நான் எதிர் பார்த்தது ! என்றார் எம்.ஜி.ஆர்.

உடனே பாடல் ஒலிப் பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர் உற்சாகம் பொங்க.

அந்தப் பாடல் தான்....

' கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும்பொய்யே சொல்லாதது ...'என்ற பாடல்.

எம்.ஜிஆரின் எதிர்பார்ப்பைப் பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் யார் என்று கேட்கின்றீர்களா?

கவிஞர் மருத காசி.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

'செய்வன திருந்தச் செய்' ....சிவாஜி மாண்பு




நடிகர் திலகம் நடிக்கும் அந்தப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள் மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார்.

டி.எம்.எஸ் பாட வேண்டிய பாடல் அது என்பதால்...அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார் மெல்லிசை மன்னர்.

மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி.எம்.எஸ் முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இந்தப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

அது மட்டுமன்றி....இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்து வரக் கூடிய விதத்திலும் இல்லை....எனவே...மன்னிக்க வேண்டும் ..இந்தப் பாடலை என்னால் பாட முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் டி.எம்.எஸ்.

'நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத் தான்...என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

ஆனால்...உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப் புலமைக்கும்...குரல் வளத்திற்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும்...

எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும் என்று டி.எம்.எஸ்ஸிடம் வேன்டுகோள் விடுத்தார் எம்.எஸ்.வி.

அப்படியா?..இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறீர்களோ?..என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி.எம்.எஸ்.

ஆனால்...எம்.எஸ்.வி...தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை.

'நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்..இந்தப் பாடலும்..உங்கள் பாடல்களில்...மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத் தான் போகிறது...'என்று சொல்லிய எம்.எஸ் வி...டி.எம்.எஸ்ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.

பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.

பாடலைக் கேட்ட நடிகர் திலகம்...'உடனடியாக படப் பிடிப்பை ரத்து செய்யுங்கள்.இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம்...'என்றார்.

அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.

'மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை உருவாக்கி இருக்கிறார் எம்.எஸ்.வி அவர்கள்.

டி.எம்.எஸ் மிகவும் அபாரமாக...இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து இருக்கிறார்.

இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன்.

டி.எம்.எஸ்ஸும், எம்.எஸ்.வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும்...அதனால் தான் படப் பிடிப்பை ரத்து செய்யச் சொன்னேன்...என்றாராம் சிவாஜி.

சொன்னது போலவே...அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து...அந்த மெட்டையும்...டி.எம்.எஸ்ஸின் குரலில் உள்ள பாவங்களையும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம்...மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.

அந்தப் பாடல் எது என்று கேட்கிறீர்களா?

'சாந்தி ' திரைப் படத்தில் இடம் பெற்ற ' யார் அந்த நிலவு?...ஏன் இந்தக் கனவு?....

அந்தக் காலத்துக் கலைஞரகளின் ஆழ்ந்த தொழில் ஈடுபாட்டுக்கும்.....'செய்வன திருந்தச் செய்' என்கின்ற தொழில் நேர்த்தியை மதிக்கின்ற மாண்புக்கும்...இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் '....ஜேசுதாஸ்



தெருவில் உள்ள தேனீர் கடைகளில் வானொலிப் பெட்டிகளில் திரைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

சிறுவனாக இருந்த போது ஜேசுதாஸ்...அந்தத் தேனீர் கடைகளின் பக்கம் நீண்ட நேரம் கால் கடுக்க நின்று வானொலியில் இருந்து வரும் பாடல்களை எல்லாம் ரசித்து விட்டு தாமதமாக பள்ளிக்குப் போவாராம்.

இதனால்...இசை தவிர்ந்த மற்றப் பாடங்களில் அவர் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற முடிந்தது.

ஜேசுதாஸின் ஐந்தாவது வயது முதல் பள்ளியில் அவர் கலந்து கொண்ட அத்தனை இசைப் போட்டிகளிலும் அவருக்குத் தான் முதற் பரிசு கிடைத்தது.

எல்லா வருடங்களிலும்...எல்லா இசைப் போட்டிகளிலும் அவர் ஒருவரே பரிசுகளைத் தட்டிச் சென்றதால்...தலைமை ஆசிரியர் யோசித்துப் பார்த்தார்.

ஜேசுதாஸை தமது..இருப்பிடத்துக்கு வரவழைத்து....'இது வரை நீ பங்கு பற்றிய எல்லாப் போட்டிகளிலும் முதற் பரிசுகளைத் தட்டிச் சென்று விட்டாய்.சந்தோஷமாகத் தான் இருக்கிறது...

ஆனால்...புதியவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஆகவே இனிமேல் இந்தப் பள்ளிக்குள் நடை பெறும் இசைப் போட்டிகள் எதிலும் நீ கலந்து கொள்ளாதே.

ஆனால்..பள்ளிக்கு வெளியே நடக்கும் இசைப் போட்டிகளில் நீ தாராளமாகக் கலந்து கொள்ளலாம்..என்றாராம்.

தலமை ஆசிரியர் சொல்வதில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அன்று முதல் ஜேசுதாஸ் பள்ளியில் நடந்த எந்த ஒரு இசைப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பின்னாளில் தொடர்ந்து பல வருடங்கள்...யாருக்குமே விட்டு வைக்காமல் ஜேசுதாஸ் தேசிய விருது உட்பட பல உயர்ந்த விருதுகளைத் தட்டிக்கொண்டது சங்கீத சரித்திரத்தில் இன்றும் முறியடிக்கப் பட முடியாத 'அசுர ' சாதனை.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் ' என்பதற்கு...ஜேசுதாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.